Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை ராயபுரத்தில் 6,607 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று (ஜூன் 23) மட்டும் 1,380 பேருக்கு கொரோனா உறுதியானதால்,அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.இதன்படி ராயபுரம் மண்டலத்தில் 6,607 பேருக்கும், குறைவாக மணலி மண்டலத்தில் 669 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தண்டையார்ப்பேட்டை, தேனாம்பேட்டை மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் ரூ.14.95 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறியவர்களிடம் இருந்து 5,26,426 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 7,14,850 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். 6,57,112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.